கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி! தீவிர சிகிச்சையில் இருவர்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காத்தான்குடியில் மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நாவற்குடா பகுதியில் நேற்று புதன்கிழமை (1) இரவு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
இருவர் வைத்தியசாலையில்..
காத்தான்குடியில் இருந்து சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்துள்ளார்.

இதன்போது முன்னால் சென்ற மோட்டர் சைக்கிளின் புகைபோக்கியில் தட்டுப்பட்டதையடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 22 வயது இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையல் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்தவர் என்பதுடன் விடுமுறைக்காகத் தாய்நாடு வந்திருந்தவர் எனவும் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் நாளை மறுதினம் கட்டார் செல்ல இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam