இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
ஈரானில் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புகளை அழிக்கும் பணியை அமெரிக்க இராணுவம் "இன்னும் தொடங்கவே இல்லை" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
மிகப்பெரிய தாக்குதல்
அந்தப் பதிவில், “உலகிலேயே மிகப் பெரியதும், மிகவும் சக்திவாய்ந்த எமது இராணுவம், ஈரானில் எஞ்சியுள்ளவற்றை அழிக்கும் பணியை இன்னும் தொடங்கவே இல்லை. அடுத்து பாலங்கள், பிறகு மின் உற்பத்தி நிலையங்கள்! புதிய ஆட்சித் தலைமைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும், அதை விரைவாகச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று ஈரானில் உள்ள மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
தெஹ்ரானில் இருந்து கராஜ் நகரை இணைக்கும் 136 மீட்டர் நீள பாலத்தின் ஒருபகுதி இதில் சேதம் அடைந்துள்ளது. பயங்கர புகை மூட்டமாகவும் பாலம் இடிந்து விழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் பின்னணியில் ஈரானுக்கு எதிரான போரில் நாங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமை சர்வதேச பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
you may like this
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri