முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் குறித்து வெளியாகியுள்ள தகவல்!
அவுஸ்திரேலியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்து பதிவு செய்ய முயன்றபோது மோட்டார் போக்குவரத்துத் துறையால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தின் உரிமையாளர் குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் நல்லாட்சி காலத்தில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இராஜாங்க அமைச்சரின் மகன் என்பது தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த சொகுசு வாகனம் பதிவு செய்ய வேரஹேரா மோட்டார் பதிவு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, சம்பந்தப்பட்ட ஆவணங்களின் கையொப்பங்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
போலி கையொப்பத்தின் மூலம் குறித்த சொகுசு வாகனம் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் போலி இலக்க தகடுகளுடன் 2015 முதல் பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நல்லாட்சியின் அரசாங்கத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர் மது போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு நன்கு அறியப்பட்டவர்” என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri