தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 75 ஆயிரம் பேர் இதுவரை சிக்கினர்
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 551 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 37 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 58 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் - வெளியேறும் 13 பிரதேசங்களில் 117 பொலிஸார், 92 இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 164 வாகங்களில் நேற்று வந்த 292 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 295 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அனுமதிப்பத்திரமின்றி 895 வாகனங்களில் பயணித்த 1,388 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" - என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
