யுவதியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த சந்தேகநபர் நையப்புடைப்பு
யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது
நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது
குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பேருந்து இன்றி வீதியில் காத்து நின்றிருக்கின்றார்.
அப்போது அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், யுவதியை அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுள்ளார்.
பொதுமக்களால் நையப்புடைப்பு
எனினும் யுவதியின் வீட்டில் இறக்கி விடுவதற்குப் பதில் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, பலவந்தப்படுத்தி வன்புணர்வு செய்துள்ளார்.
யுவதி தப்பிச் செல்ல முற்பட்ட போது பலமாக தாக்கவும் செய்துள்ளார் இதனையடுத்து யுவதி கூக்குரல் இட்டநிலையில், அயலவர்கள் திரண்டு வந்து யுவதியை வன்புணர்வு செய்த நபரை கடுமையாக தாக்கி பொல்பித்திகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர் கடுமையான காயங்களுடன் பொல்பித்திகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் அவரைக் கைது செய்துள்ள நிலையில், மருத்துவமனையில் அவர் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
