முல்லைத்தீவில் கைவிடப்பட்ட வெடிகுண்டுகள் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வெற்று காணி ஒன்றில் போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேவிபுரம் கிராமத்தில் வெறும் பற்றைக்காணி ஒன்றில் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் கிடப்பதாக நேற்று (15.03.29024 ) புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அதற்கமைய அங்கு சென்ற பொலிஸார் 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு, ஆர்.பி.ஜி வகை குண்டுகள் இரண்டு என்பன இனம் காணப்பட்டு அவற்றை மீட்டுள்ளார்கள்.
மேலும், இவற்றை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரிடம் கொடுத்து அழிக்கும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |