கொழும்பில் ஆதரவற்று இருந்த மனைவி! தமிழர் பகுதியில் 33 ஆண்டுகளுக்குப் பின் கணவரை சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் (video)

Trincomalee Sri Lanka
By Badurdeen Siyana Mar 31, 2023 08:53 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

திருகோணமலை- இலுப்பைகுளம் பகுதியிலிருந்து யுத்தம் காரணமாக 33 வருடங்கள் பிரிந்து சென்ற கணவன் - மனைவி மீண்டும் சந்தித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

1990ஆம் ஆண்டு திருகோணமலை ஏழாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கணவன் - மனைவி என திசை மாறிச் சென்ற செல்வரட்டினம் யோகேஸ்வரி (70 வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலைக் கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாகச் சிகிச்சை அளித்துப் பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பில் ஆதரவற்று இருந்த மனைவி! தமிழர் பகுதியில் 33 ஆண்டுகளுக்குப் பின் கணவரை சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் (video) | A Wife Who Met Her Husband After 33 Years

நாடியில் மச்சம்

1953ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பிறந்த செல்வரத்தினம் யோகேஸ்வரி (70 வயது) என்பவர் 1990ஆம் ஆண்டு 06 மாதம் ஏழாம் கட்டை பகுதியில் காணாமல் போனதாக கோபால் செல்வரத்தினம் (74 வயது) தெரிவித்துள்ளார்.


அன்று தொடக்கம் குறித்த மனைவியைத் தேடி வந்ததாகவும் மனைவி உயிரிழந்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாரின் உதவியுடன் மனைவி உயிரோடு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அங்குச் சென்றபோது மனைவியின் தோற்றம் மாறி இருந்த போதிலும் நாடியில் மச்சம் இருந்ததும் தலையில் காயம் இருப்பதையும் கண்டேன். அப்போது இவர் தான் என்னுடைய மனைவி எனவும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த நேரம் என்னுடைய மனதில் ஆழ்ந்த சந்தோசம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு இவர்தானா தனது தாய் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணினுடைய உறவினர்கள் நான்கு பேரின் பெயர்களை 33 வருடங்கள் காணாமல் போயிருந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட செல்வரட்ணம் யோகேஸ்வரி என்ற பெண் தனது பிள்ளைகள் மத்தியில் கூறியதை அடுத்து தனது தாய்தான் என உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கொழும்பில் ஆதரவற்று இருந்த மனைவி! தமிழர் பகுதியில் 33 ஆண்டுகளுக்குப் பின் கணவரை சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் (video) | A Wife Who Met Her Husband After 33 Years

பொருளாதார கஷ்ட நிலை

அத்துடன் ஏழு வயதில் காணாமல் போன தனது தாய் 41 வயதான நிலையில் நோயுற்ற நிலையில் தம்மிடம் வந்து சேர்ந்தது தமக்குக் கடவுள் கொடுத்த வரம் எனவும் அவரது மகன் எமக்குத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தனது தாயின் முகத்தைக் காணாத நிலையில் தாயின் உறவினர்களின் உதவியுடன் தன்னை பெற்றெடுத்த தாய் இவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மற்றுமொரு மகள் சந்தோசமாகத் தெரிவித்துள்ளார்.

தாங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தாய் இல்லாத கவலை இருந்த போதிலும் 33 வருடங்களுக்குப் பின்னர் தனது தாயைக் கண்டது தனக்கு ஆழ்ந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தான் தொடர்ச்சியாகத் தனது தாயை ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் இலுப்பை குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்குத் தனியாக சீவிப்பதற்கு எவ்வித வீடு மற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

கொழும்பில் ஆதரவற்று இருந்த மனைவி! தமிழர் பகுதியில் 33 ஆண்டுகளுக்குப் பின் கணவரை சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் (video) | A Wife Who Met Her Husband After 33 Years

 33 வருடங்கள் திசை மாறிய வாழ்க்கை

குறித்த தாய் தற்போது வசித்து வரும் தனது மூத்த மகளின் நிலைமை பொருளாதார கஷ்ட நிலை மட்டுமல்லாது உளநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் அங்கு வசித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்துள்ளது.

கிரவல் மழைக்கு கீழே வீடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட தனது தாயைப் பார்த்துக் கொள்வதற்குப் பொருளாதார சிக்கல் மாத்திரமில்லாமல் நோயுற்ற தாயைப் பார்ப்பதற்குக் கூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

ஆகவே, யுத்தம் காரணமாக 33 வருடங்கள் திசை மாறி வாழ்ந்து வந்த இந்த பெண்ணுக்கு யாராவது உதவி செய்ய முன்வருவார்களா?

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை

03 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US