திருகோணமலை - கொழும்பின் இரகசிய நகர்வுகள்! அச்சத்தில் இந்திய இராணுவம்(Video)
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில், அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகள் ஆசியாவை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தது என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் வெளிவிவகார கொள்கை என்று பார்க்கும் பொழுது 80ஆம் ஆண்டுகளில் இருந்துதான் அது தொடங்குகின்றது.
80ஆம் ஆண்டுகளில் டெல்லியில் ஒரு நம்பிக்கை காணப்பட்டது, அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் ஒரு பெரிய அக்கறை இருக்கின்றது. அதில் ஊடுறுவ அவர்கள் முயற்சி செய்கின்றார்கள் என ஒரு நம்பிக்கை டெல்லிக்கு காணப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து பார்க்கும் பொழுது திருகோணமலை 80களில் பெரிய ஒரு முக்கியத்துவத்தை பெற்றிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.