கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் முதலைகள் உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவற்றை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பொல்கொட ஆற்றில் முதலை உலாவும் காணொளி தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
களனி கங்கை
பொல்கொடா ஆறு முதலைகளின் வாழ்விடமாகும், மேலும் கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் ஓடைகளில் அதிக எண்ணிக்கையிலான முதலைகள் வாழ்கின்றன.
தியவன்னாவ, பொல்கொட ஏரி தெற்கு மற்றும் களனி கங்கை ஆகியவை நீண்ட காலமாக முதலைகளின் வாழ்விடங்களாக காணப்படுகின்றன.
முதலையின் பாதிப்பு
இது ஒரு பொதுவான சம்பவம், மக்கள் இதைப் பார்க்கும்போது மட்டுமே இது குறித்து பேசுகிறார்கள். எனவே, இந்த நீரோடைகளில் நடந்து செல்லும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.
மேலும் முதலைகளை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்ற எந்த அறிவியல் முறையும் பயன்படுத்தப்படவில்லை.
நாம் அவற்றை அகற்றினாலும், அவை மீண்டும் அதே வாழ்விடத்திற்கு வருகின்றன. முதலைகளை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்றுவது சரியான செயல் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
