கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து கரை ஒதுங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீன்கள் நேற்று (30) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
கரை ஒதுங்கும் மீன்கள்
சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடற்கரையில் இறந்து கிடக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
@tamilwinnews கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்! #Lankasri #Tamilwin #Srilanka #Easternprovince ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
அத்தோடு, காலத்திற்குக் காலம் இந்த மீனினம் கரை ஒதுங்குவதாவும் இதனை உண்பதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri