ஹட்டனில் போதைப்பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளுக்கிடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,கொழும்பில் தொழில் புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு வந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
