முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் கைது
முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(07.09.2024) இடம்பெற்றுள்ளது.
தபால் மூல வாக்களிப்பின்போது நேற்று முன்தினம்(06) புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் கைத்தொலைபேசி மூலம் ஒளிப்படம் எடுத்துள்ளார்.
கைது நடவடிக்கை
இதனையறிந்த தேர்தல் கடமையில் இருந்த அதிகாரிகள் மேற்படி ஆசிரியர் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, அந்த ஆசிரியர் தேர்தல்கள் செயலகம், முல்லைத்தீவு பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் மேற்படி ஆசிரியர் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்த வாக்குச்சீட்டைப் படம் எடுத்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri