லண்டனில் தீவிரமாக தேடப்பட்ட தமிழர்! - பொலிஸார் வெளியிட்ட விசேட அறிவிப்பு
லண்டனில் தலைமறைவான தமிழர் ஒருவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த நபரை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலசங்கர் நாராயணன் என்ற 35 வயது நபரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். குறித்த நபர் மேற்கு லண்டனில் இருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பாலசங்கர் நாராயணன் கடந்த 7ம் திகதி லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து தப்பி சென்றுள்ளார். எனினும், தப்பிச் சென்ற சில மணி நேரங்களிலேயே அவர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டனர்.
"பாலசங்கர் நாராயணன் வன்முறையாளராக இருக்கலாம், பொதுமக்கள் அவரை கண்டால் நெருங்க வேண்டாம் எனவும், உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். 999 ஐ அழைத்து தகவல் வழங்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாலசங்கர் நாராயணன் ஆசிய நாட்டவர் எனவும் 5 அடி 9 அங்குளம் உயரம் கொண்ட நடுத்தர உடலமைப்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், பாலசங்கர் நாராயணனை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி....
லண்டனில் பொலிஸாரினால் தேடப்படும் தமிழ் இளைஞன்
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam