வெற்றிகரமாகச் செயற்படும் இ-போக்குவரத்து சேவை!
போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கையாள்வதற்காக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட `இ-போக்குவரத்து' சேவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் காணொளி நாடாக்கள் உட்பட 120 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து இந்த ‘இ-போக்குவரத்து’ முறைப்பாட்டு பிரிவை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
மேலதிக தகவல்
இது தொடர்பான மேலதிக தகவல்களை www.police.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.மற்றும் அதற்குரிய 'e-traffic' செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையின் ஊடாக நாட்டில் வீதி ஒழுக்கத்தை உருவாக்குவதற்கு பங்களிக்குமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam