காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து மாணவரொருவர் சடலமாக மீட்பு
நுவரெலியா (Nuwara Eliya) - காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவன், தனது உறவினர்களுடன் நீராடச் சென்ற போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த, டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 18 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், நோட்டன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |