யாழ். நகரில் விஷ பூச்சி கடித்து ஒருவர் உயிரிழப்பு
யாழ்.நகரில் (Jafffna) வசிக்கும் நபர் ஒருவர் பூச்சி கடித்ததில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் (Jafffna) சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருண்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் காதுக்குக் கீழே பூச்சி கடித்ததில் கடுமையான வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டார்.

எனினும், கடித்தது பூச்சி என நோயாளி கூறியுள்ள நிலையில், எந்த வகையான பூச்சி என்பதை நோயாளியால் கண்டறிய முடியவில்லை.
இதற்கிடையில் நேற்றுமுன்தினம் நோயாளிக்கு வலி தீவிரமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri