என் மகன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் – நவால்னியின் தாய்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் விஷம் கொடுத்து நிகழ்த்தப்பட்டதாக வெளியான மதிப்பீடு, “என் மகன் கொலை செய்யப்பட்டார்” என்ற தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் மகனின் கல்லறையை அவரது மரணத்தின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் பார்வையிட்ட லியுட்மிலா நவால்னயா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு உயிரிழந்த நவால்னி, தவளை விஷத்திலிருந்து உருவாக்கப்பட்ட நச்சுப் பொருள் மூலம் கொல்லப்பட்டார் எனவும், “இந்த உயிர்க்கொல்லி நச்சை பயன்படுத்தும் திறன், நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசுக்கு மட்டுமே இருந்தது” எனவும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு இது தெரியும் எனவும் தமது மகன் சிறையில் இயல்பாக இறக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா தீவிரமாக மறுத்துள்ளது. ரஷ்ய அரசாஙக்ப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் “இந்த குற்றச்சாட்டுகளை எங்களால் ஏற்க முடியாது.
அவை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். நாம் உண்மையை அடைந்துள்ளோம்; ஒருநாள் நீதியையும் பெறுவோம்,” என நவால்னியின் மனைவி யுலியா நவால்னயா சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
47 வயதான நவால்னி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam