இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு
ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த கொலம்பிய வேகப் படகு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளமையானது இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகத்தை தடுத்துள்ளது.
குறித்த வேகப் படகை கொலம்பியாவின் இராணுவக் கப்பல்களும் விமானங்களும் துரத்திச் சென்று, கொலம்பியாவிற்கு அப்பால் கரீபியன் கடலில் வைத்து பிடித்துள்ளன.
இதன்போது, குறித்த படகில் இருந்து 113 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழி காணொளி
இது தொடர்பாக கொலம்பிய கடற்படை வெளியிட்டுள்ள வான்வழி காணொளியில், சந்தேகத்திற்கிடமான படகின் பணியாளர்கள் தப்பிக்க முயல்வது மற்றும் பொதிகளை தண்ணீரில் வீசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், பல மைல்கள் துரத்தலுக்குப் பிறகு, படகு இடைமறிக்கப்பட்டுள்ளதோடு வேகப் படகில் இருந்த கொலம்பியாவை சேர்ந்த மூவரும் ஹோண்டுரான் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

என் அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்.. தப்பான எண்ணம்! சின்மயி வெளிப்படை பேச்சு Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
