நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிடவுள்ள விசேட செய்தி
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம்(17) நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையில், நாளை மறுதினம் அவர் வெளியிடவுள்ள அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கும் முதலாவது செய்தியாகவும் இந்த அறிக்கை அமைகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய கூட்டணிக்கு தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri