சுற்றுலா ஹோட்டல்களைச் சார்ந்துள்ள கடற்கரை பகுதியை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!
சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரை பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா ஹோட்டல்களைச் சார்ந்துள்ள கடற்கரை பகுதியை பாதுகாக்க பிரதேச நபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அந்த நபருக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
வேலைத்திட்டம்
இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளின் தூய்மையை பேணும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும், குறித்த சுற்றுலா விடுதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
‘அழகான கடற்கரை – கவர்ச்சிகரமான பயண எல்லை’ என்ற பெயரில் “Clean Sri Lanka” வேலைத்திட்டம், அரச, தனியார் மற்றும் பொதுமக்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள கடற்கரைகளின் தூய்மையைப் பேணுவது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன், கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ப்லூ பிளாக் சான்றிதழை (Blue flag certification) இலங்கை பெறுவதற்கும் இத்திட்டம் பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
