வெடுக்குநாறி மலை விக்கிரகங்கள் உடைப்பு: வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி (Video)
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய தினம் (30.03.2023) இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது, வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டுக் கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து கடைத்தெரு வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்துள்ளது.
வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
வெடுக்புகுநாறி எங்களின் இடம்
குறித்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திக் குறித்த பேரணி இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்புகுநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தைத் தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு' போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தி சென்றுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணியாகச் சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்று வட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோஷமிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றுள்ளனர்.
நடவடிக்கை
மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரனிடமும், ஜனாதிபதிக்கான மகஜர் ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் அவர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகஜர் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
கலந்து கொண்டவர்கள்
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,
வினோநோகராதலிங்கம், சாள்ஸ்நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கயேந்திரன்,
தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல்
கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள்
மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல்போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் எனப்
பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
















புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
