கெஹெல்பத்தர குழுவை அழைத்துவர தயாரான விமானம்!
நாட்டிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், ஐந்து பாதாள உலக குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா எனப்படும் பிட்டுவா, பாணந்துரே நிலங்கா, பாக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோரை இந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தற்போது அனைத்தும் தயாராக இருப்பதாக வெளிப்படுத்துகின்றன.
அவர்களை ஏற்றிச் செல்லும் விமானம் நாளை (30) இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு புறப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதிலிருந்து கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா மற்றும் பாணதுரா நிலங்கா ஆகியோர் சிறு காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இந்தோனேசியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி தகவல்
இந்தோனேசிய பொலிஸ் குழுவில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலா அவர்களிடம் சிங்களத்தில் விசாரித்தபோது குறித்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவிலிருந்து வரும் தகவல்களின்படி இலங்கை பொலிஸார் தங்களை இந்த முறையில் பின்தொடர்வார்கள் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், தங்களைக் கொல்ல வேண்டாம் என்றும், காப்பாற்றுமாறும் அதிகாரிகளிடம் அவர்கள் கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தா ஆகியோர் சுமார் ஒரு வருடமாக இந்தோனேசியாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் துபாய், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்து வந்துள்ளனர் என்பதும், இந்தோனேசியாவில் ஒரே இடத்தில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஜூலை மாதம் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தா ஆகியோர் மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல், இருவரும் ஜோடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட போலி தகவல் என்பதும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan