தமிழர் பகுதியில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்! மனிதர்களை மிஞ்சிய நாயின் பாசம்(Video)
மட்டக்கள்ப்பு- வாழைச்சேனை பகுதியில் நாய் ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை எனும் வயோதிபப் பெண்ணொருவர் அவரது வீட்டில் பல வருடங்களாக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.
கண்ணீருடன் நாய்
இந்நிலையில், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வயோதிப பெண்மணி அவரது மகளின் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று(15.03.2023) மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை அவரது வளர்ப்பு நாய் கண்ணீருடன் சென்ற காட்சி பலரை கண்கலங்க வைத்துள்ளது.
மூதாட்டி மரணமடைந்ததை உணந்து கொண்ட நாய் கண்ணீர் சிந்தி மூதாட்டியின் உடல் அருகில் நின்றுள்ளது.
மூதாட்டி வசித்த இடத்தில் நாய்

மரணமடைந்த மூதாட்டியின் உடல் அவரது மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் இன்று (16.03.2023) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பயணித்த நாய் பட்டாசு சப்தத்தையும் பொருப்படுத்தாமல் மண்ணறை வரை சென்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நன்றியுள்ள அந்த நாய் நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan