முல்லைத்தீவில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
முல்லைத்தீவு புதன்வயல் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று முன்தினம்(16.12.2023) இடம்பெற்றுள்ளது.
குமுழமுனையில் இருந்து தண்ணீரூற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மாஞ்சோலையிலிருந்து குமுழமுனை வீதிக்கு நுழைந்த உழவு இயந்திரமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி முன்னெச்சரிக்கை
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் காயங்களுக்குள்ளானதோடு அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மழைக்காலம் என்பதால் உழவு இயந்திர சாரதி
முன்னெச்சரிக்கை இல்லாது வீதிக்குள் நுழைய முற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் முள்ளியவளை வீதிப்போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam