அனுராதபுரத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
அனுராதபுரம்(Anuradhapura) - மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம்(28.05.2024) இடம்பெற்றுள்ளது.
நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர் அவரது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் புதியதாக தனது மனைவியுடன் இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகர்.. யாரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/3c1d735e-fe54-4c34-894a-9b8b12f04136/24-6687c6071e086-sm.webp)
Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் புதியதாக தனது மனைவியுடன் இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகர்.. யாரு பாருங்க Cineulagam
![ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/8ea2ef6b-ec53-429f-acde-a0490b925d66/24-6688d40350499-sm.webp)
ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? News Lankasri
![12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு மங்கள யோகம்: அதிர்ஷ்டத்டதை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்](https://cdn.ibcstack.com/article/3191b3e8-0f0f-4a46-9292-33e84717a510/24-6689057f6cf6c-sm.webp)