யாழில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில்(Jaffna) பனை மரத்தில் ஏறி தவறி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (09.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கைதடி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்த விருந்தினர்களுக்கு நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து உடற் கூற்று பரிசோதனைக்கு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
