கட்டுத்துவக்கு வெடித்து நான்கு பிள்ளைகளின் தந்தை பலி
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எம்.நஸார் (60வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
வீட்டிலிருந்து கட்டுத்துவக்குடன் சென்ற போது தான் கொண்டு சென்ற துவக்கு தானாகவே வெடித்ததில் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதிக இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மரணம் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம்
சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam