சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்க, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடு
இந்த அழைப்பிதழ், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடுக்காக யாருக்கும் இதுபோன்ற சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக ஒரு விசேட(விஐபி) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam