முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பங்களாதேஷ் நாட்டவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது.
குறித்த சடலமானது இன்று (19.01.2024) கரையோதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கி உள்ளதாகவும் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸ் நடவடிக்கை
சடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் அது பங்களாதேஷ் நாட்டவருடையது என இனம் காணப்பட்டுள்ளதுடன் இது குறித்த விபரத்தினை பங்களாதேஷ் மற்றும் இந்தியா நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்துச் சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri