எண்ணிய பணத்தை எடுத்துச் செல்லுங்கள்..! சீனாவில் புதுமையான கொடுப்பனவு
சீன கிரேன் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி ஊக்குவிப்பு பணமாக 11 மில்லியன் டொலர்களை, வழங்கியுள்ளது.
இது இலங்கை ரூபாயில் 70 கோடிக்கும் அதிகமான தொகையாகும். எனினும் இந்த ஊக்குவிப்பு பணத்தை வழங்கும் போது குறித்த நிறுவனம் 15 நிமிடங்கள் என்ற கால வரையறையை வழங்கி, அதற்குள் ஒருவர் எண்ணக்கூடிய அளவான பணத்தை அவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லாம் என்ற நிபந்தனையை விதித்ததாக கூறப்படுகிறது.
காலவரையறை
இதன்படி, ஹெனான் மைனிங் கிரேன் கோ. லிமிடெட்டில், பணம் மேசையில் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஊழியர்கள் தம்மால் 15 நிமிடங்களுக்குள் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக்கொள்வதை காட்டும் காணொளிக்காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதன்போது, அதிகமாக ஒரு ஊழியர் ஒரு இலட்சம் யுவான்களை எண்ணி முடித்து வீட்டுக்கு எடுத்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் 12.07 இலட்சமாகும்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
