எருவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கல்விக்கு மகுடம் சூட்டும் கௌரவிப்பு நிகழ்வு
எருவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் எருவில் பெத்தான்குடி மக்களினால் கல்விக்கு மகுடம் சூட்டும் கௌரவிப்பு நிகழ்வு அதன் தலைவர் சா.பேரின்பநாயகம் தலைமையில் ஆலயத்தின் வளாகத்தில் செவ்வாய்கிழமை(03.06.2025) நடைபெற்றது.
கடந்த காலங்களில் எருவில் கிராமத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும், சமூகசேவையாளரும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அ.வசீகரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன், பட்டிருப்பு வலயக் கடல்வி அலுவலகத்தின் உதவி கல்விப்பணிப்பாளர் செ.சுரேஸ், அதிபர் சி.தீபதர்சன் மற்றும் கண்ணகை அம்பாள் ஆலய பரிபான சபைத் தலைவர் மா.சுந்தரலிங்கம், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
ஆற்றுகை
இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
