வவுனியாவில் லாறியுடன் கார் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்
வவுனியா (Vavuniya) நெடுங்கேனி சந்தியில் மீன்கள் ஏற்றும் லாறியுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(02.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் லாறியும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற நெடுங்கேனி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
you may like this