யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் 28 நாட்களேயான சிசு மரணம்
யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(22.03.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
இதன்போது கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
திடீர் மரண விசாரணை
உயிரிழந்த சிசுவின் தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் சிசு மயங்கியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிசுவை கொண்டு சென்ற போது சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |