இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
புதிய இணைப்பு
இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சென்ற போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டில் சுமார் 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றிலேயே மிக அதிக சதவீதத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், ஜெமுனு விஜேரத்ன, நேற்று குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துக் கட்டணம்
இந்த நிலையில் இன்று பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தாங்கள் முடிவு செய்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, புதிய பேருந்துக் கட்டணத் திருத்தத்துடன் பேருந்துகளை இயக்க எதிர்பார்ப்பதாக ஜெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
