அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..!

Donald Trump Missile United States of America Iran Iran-Israel War
By T.Thibaharan Mar 22, 2026 03:26 PM GMT
Report

இன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் வெறுமனே ஒரு பிராந்திய போராகவோ, அல்லது ஈரான் மீதான போராகவோ மட்டுப்படுத்தி பார்க்கக்கூடாது.

இதனை வரலாற்று பகை உணர்வுகளின் வெளிப்பாடாகவும், பொருளியல் ஆளுகைக்கான போராகவும், உலகளாவிய மேலான்மைக்கான போராகவும் பார்க்கப்பட வேண்டும்.

மத்திய கிழக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது 2500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பகைமையை கொண்டதாக பார்க்கப்படுகிறது. இது பாரசீகத்தின் சக்கரவர்த்தி டாரியஸிற்கு பின் வந்த ஷேர்சீஸும் (Xerxes) கிரேக்கத்தின் மீது மேற்கொண்ட பெரும் படையப்புடன் ஆரம்பமானது.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்! IRGC விடுத்த அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்! IRGC விடுத்த அதிரடி அறிவிப்பு

எனவே அரசியல், பொருளிள், வரலாற்று அடிப்படையிலேயே இன்றைய மத்திய கிழக்கு யுத்தத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலமே அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். மத்திய கிழக்கு எனப்படுவது மொரோக்கோவில் இருந்து ஈரான் வரையான வட ஆப்பிரிக்க பகுதியும், மேற்காசியாவும், அதனோடு இணைந்த மத்திய ஐரோ-ஆசிய பகுதியையும் உள்ளடக்கி மூன்று கண்டங்களை இணைக்கின்ற அராபிய-பாரசீக பண்பாட்டை கொண்ட நிலப் பகுதியையே மத்திய கிழக்கு என மேற்குலகத்தவர் குறிக்கின்றனர். இந்தப்பகுதி இஸ்லாமிய நிலப்பகுதி என்று பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

இந்தப் பகுதியை இராணுவ நோக்கு நிலையில் ஆய்வாளர்கள் பச்சை என குறியீட்டு பெயரால் அழைக்கின்றனர். அதே நேரத்தில் மேற்குலகத்தினை வெள்ளை என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கின்றனர்.

இவ்வாறே கிழக்காசியாவில் சீனா உள்ளிட்ட மஞ்சள் நிற மக்களைக் கொண்ட பகுதியினரை மஞ்சள் என அழைக்கின்றனர். அதே நேரத்தில் கம்யூனிச கொள்கை கொண்ட ரஷ்யாப் பகுதியையும் கம்யூனிச கொள்கையுடைய நாடுகளையும் சிகப்பு என அழைக்கின்றனர்.

மொசப்பதோமியா நாகரிகத்தின் பிரிவு

மனிதகுல வரலாற்றில் மத்திய கிழக்கு என்பது நாகரீகத்தை உலகுக்கு கடத்திய ஒரு நிலம். 3500 ஆண்டுகால மிகப் பழமையான நைல் நதி நாகரிகம் மொசப்பதோமியா நாகரிகம் தோன்றிய இந்நிலப் பகுதியின் மக்கள் வாழ்க்கை முறையும், நாகரீகமும் தனித்துவமானது.

உலகின் முதலாவது பேரரசான ஆக்காட் பேரரசு பாரசீகத்தை மையப்படுத்தியே தோன்றியது. பாரசீகம் எனப்படுவது ஈரான்,ஈராக் மற்றும் துருக்கி சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

மத்தியகிழக்கு நிலத்தில் தான் இயேசு கிறிஸ்துவின் பைபிளும், யூதர்களின் தோராவும், இஸ்லாமியர்களின் குர்கான் என்னும் தத்துவங்கள் தோன்றின.

இந்த மூன்று தத்துவங்களும் வேறுபட்டவையாக இருப்பினும் இப்போது தோராவும், பைபிளும் ஓர் அணியில் சேர்ந்துள்ளன. எதிரணியில் குர்ஆனும் நிலையடுத்துள்ளது.

கப்பல் போக்குவரத்து சிக்கல் தீவிரம்: ஈரானிலிருந்து வந்த அவசர அழைப்பு!

கப்பல் போக்குவரத்து சிக்கல் தீவிரம்: ஈரானிலிருந்து வந்த அவசர அழைப்பு!

இந்த பின்னணியில் மத்திய கிழக்கில் தோன்றிய மூன்று தத்துவங்களான தோராவும் அல்குர்ஆனும் பைபிளும் மோதும் தத்துவார்த்த போர்க்களமாக இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியும் பாரசீகப் பகுதியும் விளங்குகிறது.

சிலுவையில் அறைந்து கொலை

முதலாவது சிலுவையில் அறைந்து கொலை செய்யும் தண்டனை முறை பற்றி முதலாவது வரலாற்றாசிரியரான ஹெரோடோடஸால் அவர்களின் பதிவேட்டில் உள்ள வரலாற்று நிகழ்வை இங்கு நியாபகப்படுத்த வேண்டியது அவசியமானது.

பண்டைய கிரேக்கத்தின் சமோஸின் தலைவனான பொலிகிரேட்ஸ், கிமு 522- இல் பாரசீகர்களால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது சடலம் சிலுவையில் அறையப்பட்டது. இவரே உலகின் வரலாற்றில் முதலாவதாக சிலுவையில் அறையப்பட்ட மேற்குலகத்தவராவார்.

அந்தப் பகையின் வன்மத்தை வரலாற்று ரீதியாக இருதரப்பினரும் காவி செல்கின்றனர் என்பதனை இன்றைய யுத்தத்தின் அழிவுகளில் இருந்து காண முடிகிறது. முதலாவது பாரிய கிரேக்க-பாரசீகப் போரின்போது கண்டம்விட்டு கண்டம் கடந்த படையெடுப்பாக கி.மு 490 இல் ஒன்றரை லட்சம் பாரசீக படைகளுடன் படையெடுப்பு நிகழ்ந்தது.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

அந்தப் போரில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் படைகளுக்கும் இடையே மராத்தான் போர் நடந்தது. ஏதென்ஸிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) தொலைவில் உள்ள மாரத்தான் கடற்கரையில் பாரசீகப் படைகளை அதிகமாக எண்ணிக்கையில் இருந்த கிரேக்க நகர அரசுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கிய ஏதெனியர்கள் தோற்கடித்தனர்.

கிமு 480- இல், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீகப் படையெடுப்பின் போது, ஸ்பார்டன் மன்னன் லியோனிடாஸின் கீழ் ஒரு சிறிய கிரேக்கப் படை வீரர்கள் 300பேரும் கிரேக்கத்தில் உள்ள தெர்மோபைலே கணவாய் 4 மைல்கள் நீளமுள்ள பகுதியில் பாரசீகர்கள் கிரேக்கத்துக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தி சண்டையிட்டு மரணித்தனர்.

அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் "கிரேக்கத்தின் பெண்களே உங்களை பாதுகாப்பதற்கு 300 சிங்கங்கள் இங்கே உறங்குகின்றன" என்ற வாசகம் இன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்

உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்

இவை மேற்குலகத்தவர்களுக்கும் மத்திய கிழக்குக்குமான பகையின் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன. உலகின் முதலாவது வரலாற்று ஆசிரியரான ஹெரடோட்டஸ் தனது " The Histories " என்ற தனது வரலாற்று நூலில் (கிமு 425) கிரேக்க-பாரசீகப் போர்களின் நீண்ட கணக்கு எனக் குறிப்பிடுகின்றார். 

சிலுவை யுத்தம்

பின் நாளில் கிபி 1092 தொடக்கம் கிபி 1172 வரையான காலத்தில் கிறிஸ்தவர்களின் புனித தளமான ஜெருசலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக ஐரோப்பியர்கள் தொடர்ந்து 200 ஆண்டுகள் ஒன்பது தடவைகள் நீண்ட யுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

அது சிலுவை யுத்தம் என அழைக்கப்படுகிறது. இதை மத்திய கிழக்குக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான கடும் பகைமையின் வெளிப்பாடு, எனினும் ஐரோப்பியர்களால் அன்று ஜெருசலத்தை கைப்பற்ற முடியவில்லை. அராபிய நிலத்தில் இஸ்லாமியர்கள் படைக் கட்டுமானத்துடன் தத்துவார்த்த ரீதியிலும் எழுச்சியுடன் வெற்றி அடைந்திருந்த நிலையில் மேற்குலகத்தினரால் இஸ்லாமியர்களை வெற்றி கொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, அராபிய நிலத்திலிருந்து தொடர்ந்து இஸ்லாமியர்கள் தமது அரசை விஸ்தரித்து கிழக்கு ரோமப் பேரரசின் தலைநகரான கென்ஸ்டாண்டிநோபிள்(இஸ்தான்புல்) ஓட்டோமான் துருக்கியர்களினால் கிபி 1453-இல் கைப்பற்றப்பட்டது.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

இது ஐரோப்பியர்களுக்கு இஸ்லாமியர்களால் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி. பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம் “தங்கக் கொம்பு” என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது.

பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இருகரைகளிலும் அமைந்துள்ள கென்ஸ்டாண்டிநோபில் நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது.

இந்த நகரம் தான் மேற்குக் கிழக்கு வாணிபத்தின் தரைவழி பாதையும்கூட ஐரோப்பியர்களின் கிழக்கு நாடுகளுக்கான தரைவழிப் பாதை இதன் மூலம் தடுக்கப்பட்டது.

அநுர அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள்: மனோ கணேசன் எச்சரிக்கை

அநுர அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள்: மனோ கணேசன் எச்சரிக்கை

ஓட்டோமான் துருக்கிய இஸ்லாமியர்கள் கைப்பற்றியதும் பைசாந்தியப்பேரரசை ஓர் இஸ்லாமிய பேரரசாக ஐரோப்பிய நிலத்துக்குள் மாற்றிவிட்டனர். இது இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் நிகழ்த்திய ஓர் அரசியல் புவியியல் மாற்றமாகும்.

பேரரசுவாதத்தின் விளைவுகள்

மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா மீதான படையெடுப்பாக 1453 ஆம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியர்கள் கொன்ஸ்தாந்ததிநோபிளை (இன்றைய இஸ்தான்புல்) கைப்பற்றியதை அடுத்து கிழக்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பியர்களிடையே ஒரு பெரும் அரசியல் அறிவியல், அரசியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியது.

அந்த அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடு நாடுகாண் பயணங்களை மேற்கொள்ள வைத்தது. அதனால் உலகளாவிய புதிய குடியேற்றவாத நாடுகள் தோன்றின. ஐரோப்பாவில் பெரும் இராணுவ வளர்ச்சி ஏற்பட்டது.

இது ஆசியக் கண்டத்திற்கும் பரவியது. இந்த பெரும் இராணுவ வளர்ச்சி பேரரசவாத ஆசையினை ஒவ்வொரு நாடுகளிலும் தோற்றுவித்தது. இன்றைய அரசியல் பொருளியல் அறிவியல் உலகம் என்பது பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் விளைவினால் தோற்றுவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

இவ் ஐரோப்பிய நாகரிக வளர்ச்சியின் பரவலின் பிரதிபலிப்பாக இன்றைய உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்றைய உலக ஒழுங்கு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட இராணுவ, அரசியல், பொருளியல் விளைவுகளின் அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்காக இன்று தோற்றம் பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் ஏற்பட்ட பேரரசவாத அவா மனிதகுலத்துக்கு எதிரான பெரும் இனவழிப்புகளுக்கும், குரூரமான வஞ்சக அரசியலுக்கும் வழி வகுத்தது. இந்த வஞ்சகமான மனித தர்மத்துக்கு முரணான பேரரசுவாதம் அரசியல் கோட்பாடாகவும், அரசியல் நெறி முறையாகவும் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது.

இத்தகைய அரசியல் கோட்பாடுகளில் இருந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. இங்கே நீதிக்கும் நேர்மைக்கும் மனித தர்மத்துக்கு இடம் கிடையாது. அனைத்தும் அந்தந்த நாடுகளுடைய தேசிய அபிலாசைகளும், நலன்கள் சார்ந்தே நீதி வரையறுக்கப்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.    

இஸ்லாமியப் பேரரசு உருவாக்கம்

இவ்வாறு தான் கிபி 6ஆம் நூற்றாண்டில் நபிகள் நாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு இன்று அரேபியா, வடஆபிரிக்கா, பாரசீகம் உட்பட அரபுலகம் எனப்படும் 26 நாடுகளையும் தெற்கு ,தென் கிழக்கு ஆசியாவில் ப்ரூணை, மலேசியா, இந்தோனேசியா, வங்காள தேசம், மலேசியா, மாலதீவுகள் உள்ளிட்ட 48 இஸ்லாமிய நாடுகளை தோற்றுவித்திருக்கிறது.

தரைசார் பேரரசாக விஸ்தரிப்பை செய்து மத்தியகிழக்கில் 26 இஸ்லாமிய நாடுகளும் உள்ளடக்கி 53 கோடி இஸ்லாமியர்களையும், இந்தப் பிராந்தியத்துக்கு வெளியே 135 கோடி இஸ்லாமியர்களையும் தோற்றவித்தள்ளார்கள். உலகில் உள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் 48 நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

இஸ்ரேலை தாக்கிய ஈரானின் ஏவுகணை! ட்ரம்பிற்கு ஆட்டம் காட்டிய புதிய தொழில்நுட்பம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானின் ஏவுகணை! ட்ரம்பிற்கு ஆட்டம் காட்டிய புதிய தொழில்நுட்பம்

43 நாடுகளில் இஸ்லாமிய சட்டமே நடைமுறையில் உள்ளது. உலக சனத் தொகையில் 24.9% இஸ்லாமியர்களாக உள்ளனர். இதனை நபிகள் நாயகம் அவர்களின் அரசியல் புவியியல் மூலோபாயம் எனக் குறிப்பிடலாம். எனினும் இவர்களின் பிராந்தியத்தின் கடற் பகுதிகூட இவர்களின் கையில் இல்லை.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

வாஸ்கோடகாமா கண்டுபிடித்த புதிய கடல் பாதைகள் மத்திய கிழக்கை முற்றுகையிட்டு கடந்த 500 ஆண்டுகளாக இன்றுவரை இஸ்ராமியர்களை இந்தப் பிராந்தியத்துக்குள் சிறைப்பிடித்துள்ளார்கள் என்று சொல்லுவதே சாலப்பொருந்தும்.

ஆயினும் இஸ்லாமியர்கள் மத கோட்பாட்டின் அடிப்படையிலான இனப்பெருக்க விகிதத்தில் உயர் நிலையில் இருப்பதனால் உலக மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் தொகை வேகமாக அதிகரித்துச் செல்கிறது.

அந்த மக்கள் பலத்தைக் கொண்டு அவர்கள் தங்களுக்குள் ஒரு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) 1969 இல் நிறுவப்பட்டது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இன்று 57 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. அவற்றில் 56 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. இவற்றில் 48 நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாகும். இதனை மேற்குலத்தவர்கள் இன்று அச்சத்துடனேயே நோக்குகின்றனர். 

விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளின் ஐரோப்பா மீதான எதிர் நடவடிக்கைகள், ராணுவ படைக்கட்டுமானங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப கட்டுமான, இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இணைவு முன்னெடுப்புகள், பொருளியல் மேம்பாடு, யுத்தம் என்பவற்றை உற்று நோக்கினால் அவை வரலாற்று ரீதியாக எப்போதும் ஐரோப்பியர்களுக்கே நலனை விளைவித்துள்ளது.

அத்துடன், அதனை தமக்கு சாதகமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் அவர்கள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறி இருக்கிறார்கள் அவர்களிடம் உள்ள முன்னேற்றகரமான விஞ்ஞான தொழில்நுட்பம் என்பது எதிரிகளை அனைத்து வகைகளிலும் தோற்கடிக்க கூடிய வல்லமை கொண்டுள்ளதாக உள்ளது.

அத்தகைய தொழில்நுட்பத்தை வரலாற்று ரீதியான பகை நிலத்தில் அதாவது மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதுவும் நவீன தொழில்நுட்பத்தையோ அதிலும் குறிப்பாக அணுத்து தொழில்நுட்பத்தை பெற்று விடக் கூடாது என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

மத்திய கிழக்கில் ஈரான் அணு தொழில்நுட்பத்தை பெற்று விட்டால் மத்திய கிழக்கில் இஸ்லாமியத்துக்கு எதிராகச் செருகப்பட்ட ஆப்பாகிய இஸ்ரேல் என்ற தேசம் அந்த நிலத்தில் இருக்க முடியாது என்பதையும் மேற்குலகத்தவர் நன்கு அறிவார்கள்.

ஆகவே தான் பச்சைக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கொள்வதற்கு மூன்று பரிமாணங்களை கொண்ட தான் தந்துரோபாயங்களை கையாள்கின்றனர்.

1) மத்திய கிழக்கின் இஸ்லாமிய உணர்வுக்குரிய பலஸ்தீனப் பகுதியில் அடிக்கடி நிலத்தை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தொடர்ந்து ஒரு போர்பதட்ட சூழலில் வைத்திருப்பதன் ஊடாக இஸ்லாமியர்களின் பொருளியல் அறிவியல் விருத்திக்கு தடங்கல்களை ஏற்படுத்துவது.

2) பச்சைக்கும் பச்சைக்கியமான முரண்பாடுகளை தோற்றுவிப்பது அதாவது நயத்தாலும், பயத்தாலும் மத்திய கிழக்கு நாடுகளை தனது பொருளாதார மற்றும் ராஜரீக உறவுகளின் ஊடாக வெள்ளை அணியில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையிலான யுத்தத்தை தோற்றுவிப்பது.

3) விஞ்ஞான தொழில்நுட்ப யுத்தத்தை நடத்துவது. மத்திய கிழக்கு நாடுகள் அணு தொழில்நுட்ப வல்லமையைப் பெற்று விடாமல் தடுப்பதற்காக நேரடியான அழித்தொழிப்பு தாக்குதல் தாக்குதல்களை விஞ்ஞானிகள் மீதும் படத்துறை தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மீதும் நடத்திப் படுகொலை செய்தல்.

அமெரிக்காவின் திட்டம் இதுதானா?

இத்தகைய முப்பரிமாண உள்ளடக்கத்தைக் கொண்ட தான் போர் வியூகத்தையே அமெரிக்கா கொண்டுள்ளது.

ஈரானில் ஒரு நேரடியான தரைவழி யுத்தத்தை ஆரம்பித்தால் ஈரானில் வாழ்கின்ற எட்டு கோடி பாரசீகர்களினதும் கடும் எதிர்ப்பைச் சம்பாதிப்பது மாத்திரமல்ல மத்திய கிழக்கின் வாழ்கின்ற 53 கோடி இஸ்லாமியர்களின் எதிர்ப்பையும், ஆப்பிரிக்க, தெற்கு-தென் கிழக்காசிய நாடுகளில் வாழ்கின்ற 153 கோடி இஸ்லாமியர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும் என்பதனால் ஈரானில் ஒருபோதும் ஒரு தரைவழிப்போர் நடத்துவதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது.

ஆயினும் இந்தத் தாக்குதல்களில் ஈரான் எடுக்கின்ற கடும் போக்கு ஈரானுக்கு அதன் வளர்ச்சியின் 20 வருடம் பின்னோக்கி தள்ளுவதாக அமையலாம். இந்த யுத்தத்தை ஈரானியர்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டு செல்லவே விரும்புகின்றனர்.

மத்திய கிழக்கில் ஒரு நீடித்த போருக்கு அமெரிக்கா செல்வதாக இருந்தால் அது அதனுடைய உலகம் தழுவிய மேலாண்மையை இழக்கும் நிலையயையே ஏற்படும்.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

ஆகவே தான் அமெரிக்கா தனது அரசியல் பொருளியல் மேலாண்மை நலன்களை தொடர்ந்து பேணவும், அடையவும் ஈரான் மீது படைவீரர்களைத் தரையிறக்கம் செய்யாமல் விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வான்வழியூடான சீரழிப்பு யுத்த முறைமையை கையாண்டு காலத்துக்கு காலம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி ஈரானின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை தடுத்து வருகிறது.

இன்றைய யுத்தம் என்பது வெறும் படை வீரர்களின் எண்ணிக்கையிலோ, படைக்கல எண்ணிக்கையிலும் தீர்மானிக்கப்படுவதல்ல.

அது முற்றிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் மட்டுமே போரின் வெற்றிகள் தோல்விகள் நிர்ணயம் பெறுகின்றன.

ஆகவே தொழில்நுட்பத்தின் அதிலும் குறிப்பாக ராணுவ தளபாடத் தொழில்நுட்பத்தின் பரவலை தடுப்பதற்கான யுத்தமாகவே இந்த யுத்தம் முதலாவது கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும்.

அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! | Reason For The Us Airstrike

பரவலை தடுத்து விட்டால் ராணுவ மேலாதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்கவும் உலக ஒழுங்காய் தீர்மானிக்கும் சக்தியாக தொடர்ந்து நிலைக்க முடியும். மத்திய கிழக்கிலும் ஈரானிலும் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களும் யுத்தங்களும் வெறுமனே மூல வளங்களை பெறுவதற்கான யுத்தமாகவோ அல்லது மேலெழுந்த வாரியாக அரசியல் ராணுவ ஆய்வுகளில் குறிப்பிடப்படுகின்ற சதிக்கோட்பாட்டு(Conspiracy theory) விளக்கத்தை மாத்திரம் கொண்டிருக்கவில்லை.

அவ்வாறு சதிக் கோட்பாடு சதி என்று கூறுவோமேயானால் மத்திய கிழக்கின் அரசியல் தத்துவார்த்த விளக்கம் போதாமையையே வெளிப்படுத்தும். எனவே அதிலிருந்து மேலும் பல படிகள் முன்னேறி விரிவான ஒரு பரந்த பார்வைக்கூடாக இதனை உற்று நோக்கினால் மத்திய கிழக்கில் நடைபெறுவது சீரழிப்பு யுத்தம் முறை என வரையறுப்பது தான் பொருத்தமானது. 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 22 March, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US