கொழும்பில் 8ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு
தெற்காசிய பிராந்தியத்தில் விமான பாதுகாப்பு மேம்பாட்டிற்கான 8ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அனுசரணையுடன் ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு
இந்த மாநாடு கொழும்பில் உள்ள விருந்தகமொன்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 சிரேஷ்ட விமான போக்குவரத்து நிபுணர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.