ஓமந்தையில் மடத்துவிளாங்குளம் உடைப்பு
ஓமந்தை (Omanthai)- பாலமோட்டை பகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் அந்தக் குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது.
அத்தோடு, வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அந்தப் பகுதிக்கான வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
குளம் உடைப்பு
குறித்த குளமானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்துள்ளதுடன், விவசாயிகளே சிறிய திருத்த வேலைகளை கடந்த காலத்தில் செய்திருந்தனர்.
தற்போது குளம் உடைப்பெடுத்து பாய்ந்து வருவதனால் அதன் கீழான நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.
குறித்த குளத்தின் உடைப்பை கட்டுப்படுத்த இராணுவத்தினர் கமக்கார அமைப்பினருடன் இணைந்து முயற்சி செய்த போதும் அது பயனளிக்காத நிலையில் தற்போது தண்ணீர் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
