வவுனியாவில் 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இரு பகுதிகளையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம், முருகையா குளத்திற்கு செல்லும் வீதியில் உள்ள 2 ஏக்கர் அரச காணியானது உறவினர்கள் நான்கு பேருக்கு பகிரப்பட்டிருந்தது.
குறித்த காணிக்குரியவர்களில் ஒரு குடும்பத்தினர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று அங்குள்ள முகாமில் இருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தனர்.
நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு உரித்தாக இருந்த காணியும் இங்கு வசித்து வந்த அவர்களது உறவினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அவர்கள் தமக்கான காணியை வழங்குமாறு கோரிய நிலையில் இரு பகுதியினருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக வாய் தர்க்கம் இடம்பெற்று பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்ததுடன், இரு பகுதியினரையும் பிரச்சனைக்குரிய காணிக்குள் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த காணியை கடந்த காலங்களில் பராமரித்து வந்தவர்கள் அக் காணிக்கான வேலிகளை அடைத்த நிலையில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பியர்கள் அது தமது காணி எனவும் அதற்குள் தாம் கொட்டகை அமைக்கப் போவதாகவும் தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொட்டகை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதானால் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
அதில் இரு பகுதியிலும் இருந்து 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றிருந்தனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வவுனியா பொலிஸில் மீண்டும் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளைமேற்கொண்ட பொலிஸார் இரு தரப்பினையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அக் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் குறித்த பிணக்கை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இரு மாதங்களுக்குள் தீர்வு வழங்குவதாக அவரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

பாக்கியலட்சுமியில் ராதிகாவிற்கு தெரியவரும் கோபி பற்றிய உண்மை- யார் சொன்னது தெரியுமா, பரபரப்பான புரொமோ Cineulagam

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

வெளிநாட்டில் வாழ்க்கையை தொலைத்து நின்ற நபர் கைக்கு வந்த பல கோடி பணம்! புலம்பெயர்ந்த நண்பனால் அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022