நாடளாவிய ரீதியில் 734 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும் 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு காவல்
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ், 6,388 கிராம் 385மில்லி கிராம் கஞ்சா, 1,037 போதை மாத்திரைகள் மற்றும் 3,957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
