வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் யால சரணாலயத்திற்கு 72 இலட்சம் வருமானம்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் யால வனவிலங்கு சரணாலயத்திற்கு 72 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதி சொகுசு கப்பல்களின் மூலம் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு யால சரணாலயத்திற்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி கப்பல் ஒன்றில் வருகை தந்த 551 சுற்றுலாப் பயணிகள் 110 வாகனங்களில் சரணாலயத்தினை பார்வையிட்டுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
இந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் 62 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் கடந்த 5ஆம் திகதி மற்றுமொரு கப்பலில் வருகை தந்த 86 வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் 18 வாகனங்களில் சரணாலயத்தினை பார்வையிட்டுள்ளனர்.
அரசாங்க நடவடிக்கைகள்
இந்த சுற்றுலாப் பயணிகள் ஊடாகவும் சுமார் பத்து இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.