இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப் பகுதியில் குறித்த 669 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 69,957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.