அறுகம்குடா மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் 6 பேர் கைது
தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா பகுதியில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள மூலோபாய பொருளாதார இடங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவில் மாலைத்தீவு நாட்டவர் மற்றும் ஐந்து இலங்கையர்கள் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
அவர்கள் அனைவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri