அதிகாலையில் ஏற்பட்ட விபத்து! அறுவர் படுகாயம் (Photos)
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் காரொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (15) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொஷன் நிகழ்விற்காக அனுராதபுரம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய கணவர் மனைவி பிள்ளை ஆகிய மூவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri
