அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு சுமார் பத்தாயிரம் மருந்தாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாடளாவிய ரீதியில் ஆறாயிரம் மருந்தாளுநர்கள் மாத்திரமே உள்ளனர்.
மருந்தாளுநர்களின் எண்ணிக்கை
இந்நிலையில், மருந்தக உரிமையாளர்கள் ஒரு மருந்தாளுநரிடம் பதிவுசெய்து, பயிற்சி பெற்ற மருந்தாளுநர்களுடன் சேர்ந்து மருந்தகங்கள் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

இருப்பினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை அவசர தீர்மானமொன்றை எடுத்து வருடாந்த உரிமம் புதுப்பித்தலின் போது மருந்தாளுநர்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு 5ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மருந்தாளுநர்கள் பற்றாக்குறை இருந்த போதிலும், தேவை பூர்த்தியாகும் வரை உரிமங்களை புதுப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதற்கிடையில், மருத்துவ அதிகாரிகளால் மருந்தகங்களை ஆய்வு செய்யும் அல்லது உரிமங்களை பரிந்துரைக்கும் திட்டத்தை ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam