பதுளையில் போதைப்பொருளுடன் 5 பேர் கைது
பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (02.01.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 36, 42, 57, 63 மற்றும் 67 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் பதுளை நெலும்கம மற்றும் பஹல்கம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பதுளை பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
பதுளை நகரைச் சுழவுள்ள பகுதிகளில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு, கைது இடம்பெற்றுள்ளது.

பதுளை அந்தெனிய பாலம் மற்றும் கலன் சந்திக்கு அருகில் இரண்டு சந்தேகநபர்களும், பதுலுபிட்டி, கைலாகொட மற்றும் நெலும் கமடி ஆகிய இடங்களில் மூன்று சந்தேநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பொறுப்பு அதிகாரி பி.ஓ.பி.பிரியந்த சர்மிந்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam