காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தலில் ஈடுபட்ட சிலர் கைது
காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருந்த சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், கீழக்காசாக்குடி லெட்சுமி நகரில் கடந்த 16ஆம் திகதி ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக 300 கிலோகிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட சோதனை
இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு படகுமூலம் கடத்த வசதியாக மூட்டைகளுடன் பதுங்கியிருந்த இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் காரைக்காலுக்கு இலங்கையிலிருந்து கடற்தொழிலாளர்க்ள அவ்வப்போது இரவோடிரவாக சிறிய படகுகளில் வந்துள்ளமையும், காரைக்காலிலிருந்து படகில் கஞ்சாவை ஏற்றி இலங்கைக்கு அவர்கள் வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்
இந்த நிலையிலேயே கஞ்சா கொள்முதலுக்கு காரைக்காலை நோக்கி இரவு நேரத்தில் படகில் வந்த திருகோணமலையைச் சேர்ந்த நபரொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவருமாக இருவர் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வந்த படகையும் கடலோர காவல் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
