தொழிலுக்காக குவைத் சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
தொழிலுக்காகக் குவைத் சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல். 230 என்ற விமானத்தில் இன்றைய தினம் (22.03.2023)அதிகாலை அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
38 பெண்களும், 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தூதரகத்தின் நடவடிக்கை
குவைத்துக்குத் தொழிலுக்குச் சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அவர்கள், குவைத்துக்கான இலங்கைத் தூதரகத்துக்கு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்றைய தினம்
நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.