இரண்டு குழுக்களிடையில் சண்டை! நால்வருக்கு விளக்கமறியலில்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களிடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஐந்தாம் வட்டாரம், திரியாய், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 18, 20, 21 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பகைமை நிலை, வாய்த்தர்க்கங்கள் கைகலப்பாக மாறியதில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இரு குழுவிலும் இருந்து நால்வரைக் கைது செய்து சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
