பிரித்தானியாவில் 4 நாள் வேலை திட்டம் வெற்றி! மகிழ்ச்சியில் ஊழியர்கள்
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற சோதனை திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற பரிசோதனை திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயல்படுத்தி வந்த நிலையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை திட்டத்தின் மூலம் பல மாற்றங்கள் காணப்பட்டதாக ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட பாஸ்டன் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஜூலியட் ஷோர் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களின் வருவாய் உயர்வு
பிரித்தானியாவில் 61 நிறுவனங்கள் இந்த நான்கு நாட்கள் சோதனை திட்டத்தை செயற்படுத்தி வந்துள்ளது.
இந்நிலையில், 91 சதவீத நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடர போவதாகவும், 4 சதவிகித நிறுவனங்கள் இது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு நாள் வேலைத்திட்டத்திற்கு 10க்கு 8.5 என்ற மதிப்பீட்டை நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களின் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், வருவாய் 35 சதவிகிதம் உயர்ந்துள்ளதுடன் வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
