ஐஸ் போதை விருந்து நடத்திய 4 பேர் கைது
மாவனெல்லை கொட்டவன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப் விருந்தை நடத்திய நிலையில் அந்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
குறித்த விருந்தை ரமழான் பண்டிகை தினத்திற்கு மறுநாள் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் நடத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20, 22, 24 வயதானவர்கள் எனவும், இவர்கள் மாவனெல்லை நகருக்கு அருகில் வசித்து வரும் கோடிஸ்வர வர்த்தகர்களின் புதல்வர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மூன்று மில்லி கிராம் ஐஸ் மற்றும் அதனைப் பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.